உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

சனி, 16 ஏப்ரல், 2011

அஷ்டலக்ஷ்மி வழிபாடு

ஸ்ரீசோடச மகாலட்சுமியின் அருளைப் பெற புதிய எளிய வழிமுறையும் ஸ்தோத்திரமும்

1. ஸ்ரீ தனலட்சுமி

ஸகல உயிர்களிடத்தும் நிறைவாக இருப்பவள் ஸ்ரீ தனலெட்சுமி. எனவே நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இருக்க வேண்டும். போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்து ஸ்ரீதனலெட்சுமியின் அருளை பரிபூர்ணமாகப் பெறலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் சகலப் பிராணிகளிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் இருக்கின்றாளோ அந்த ஐஸ்வர்ய லட்சுமியை நான் வணங்குகிறேன்.

2. ஸ்ரீ வித்யாலட்சுமி

எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார்மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலெட்சுமியின் அனுகிரகத்தைப் பெறலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் இருக்கின்றாளோ அந்த வித்யாலெட்சுமியை வணங்குகிறேன்.

3. ஸ்ரீ தான்யலட்சுமி

ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் நாம், நம் பசியைத் தீர்த்துக் கொள்வதோடு நில்லாமல் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்ய லட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பசி உருவில் இருக்கின்றாளோ அந்த தான்யலட்சுமியை வணங்குகின்றேன்.

4. ஸ்ரீ வீரலட்சுமி
 
உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மண உறுதியுடன் ஸ்ரீவீரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.
யாதேவீ ஸர்வபூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தைரிய உருவில் இருக்கின்றாளோ அந்த வீரலட்சுமியை வணங்குகிறேன்.

5. ஸ்ரீ ஸெளபாக்யலட்சுமி

ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு, மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்து ஸ்ரீஸெளபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாளோ அந்த ஸெளபாக்கிய லட்சுமியை வணங்குகிறேன்.

6. ஸ்ரீ ஸந்தானலட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் தாய் உருக் கொண்டிருக்கும் ஸ்ரீஸந்தானலட்சுமியின் அருளைப் பெற எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பார்கள். தாயன்போடு ஸ்ரீஸந்தான லட்சுமியைத் துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.
யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் இருக்கின்றாளோ அந்த ஸந்தான லட்சுமியை வணங்குகிறேன்.

7. ஸ்ரீ காருண்யலட்சுமி

சகல ஜீவன்களிடத்தும் கருணையோடு பழகவேண்டும். உயிர்வதை கூடாது. மற்ற உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை. ஜீவ காருண்யத்தோடு வாழ்ந்தால் ஸ்ரீகாருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தயை உருவில் இருக்கின்றாளோ அந்த காருண்ய லட்சுமியை வணங்குகிறேன்.

8. ஸ்ரீ மஹாலட்சுமி

நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் ஸ்திரமாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீமகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள். இதை விடுத்து பிறரிடம் எதையாவது பெற வேண்டும். என்ற எண்ணத்துடனிருந்தால் மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் தான் நம் வாழ்க்கை அமையும். இரைக்கின்ற கிணறு சுரக்கும், கொடுத்தால் நிச்சயம் கிடைக்கும்.
யாதேவீ ஸர்வபூதேஷு மஹாலட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் செல்வ உருவில் இருக்கின்றாளோ அந்த வைபவ லட்சுமியை வணங்குகிறேன்.

9. ஸ்ரீ சக்திலட்சுமி

ஸ்ரீ தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் தானே சக்தி வடிவமாக இருக்கிறாள். எனவே எந்த வேலையையும் என்னால் முடியாது என்று சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.
யாதேவீ ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
எல்லா உயிரினங்களிடத்தும் எந்த தேவீ சக்தி வடிவில் இருக்கின்றாளோ, அந்த சக்தி லட்சுமியை வணங்குகிறேன்.

10. ஸ்ரீ சாந்திலட்சுமி

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாமே சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லெட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் சாந்தி உருவில் இருக்கின்றாளோ அந்த சாந்தி லட்சுமியை வணங்குகிறேன்.

11. ஸ்ரீ சாயாலட்சுமி

நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையைச் செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்த்து ஸ்ரீச்சாயா லட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.
யாதேவீ ஸர்வபூதேஷு ச்சாயாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பிரதி பிம்ப வடிவில் இருக்கின்றாளோ அந்த சாயா லட்சுமியை வணங்குகிறேன்.

12. ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி

எப்பொழுதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்கவேண்டும். பிறருக்கு உதவ வேண்டும். ஞானம் பெற வேண்டும். பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலமடையலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆசை உருவில் இருக்கின்றாளோ அந்த த்ருஷ்ணா லட்சுமியை வணங்குகிறேன்.

13. ஸ்ரீ சாந்தலட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் பொறுமை உருவில் இருக்கும் ஸ்ரீக்ஷõந்த லட்சுமியை தியானிப்போம். பொறுமை கடலினும் பெரிது, பொறுத்தார் பூமியை ஆள்வார், பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.
யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷõந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பொறுமை வடிவில் இருக்கின்றாளோ அந்த சாந்த லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.

14. ஸ்ரீ கீர்த்திலட்சுமி

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
யாதேவீ ஸர்வபூதேஷு கீர்த்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் கீர்த்தி வடிவில் இருக்கின்றாளோ அந்த கீர்த்தி லட்சுமியை வணங்குகிறேன்.

15. ஸ்ரீ விஜயலட்சுமி

விடாத முயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜய லட்சுமி எப்பொழுதும் நம்முடனிருப்பாள்.
யாதேவீ ஸர்வபூதேஷு விஜயரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் வெற்றி வடிவில் இருக்கின்றாளோ அந்த விஜய லட்சுமியை வணங்குகிறேன்.

16. ஸ்ரீ ஆரோக்கியலட்சுமி

நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று வளமுடன் வாழ்வோம்.
யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய உருவில் உறைகின்றாளோ அந்த ஆரோக்கிய லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.
தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். நமஸ்தேஸ்து என்று சொல்லும் போதெல்லாம் நமஸ்காரம் செய்த பலன் விரைவில் கிடைக்கும்.

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல் (தமிழில்)

உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி
உன்பாதம் சரணடைந்தோம் அஷ்டலக்ஷ்மி
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலெக்ஷ்மி
கலையாவும் நிறைந்தவளே அஷ்டலக்ஷ்மி
நிலையான அருட்செல்வம் அருள்பவள் அவளே
உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே (உலகெங்கும்)
ஸ்ரீ லக்ஷ்மி
பாற்கடலில் தேவர் அமுதம் கடையும் போது
பாரெல்லாம் வியந்திட நாரணி உதித்தாள்
நாரணனும் தேவியை மார்பினில் தாங்கி நின்றார்
பூரணியும் பூவுலகைக் காக்க வந்தாள்
அவளே ஸ்ரீ லக்ஷ்மி தேவி லக்ஷ்மி

1. ஸ்ரீ ஆதிலக்ஷ்மி

இரு கண்கள் திருக்கரங்கள் கொண்டவள் அவளே
இகபரசுகம் யாவும் கொடுப்பவள் அவளே
அபயம் அளிப்பவளே ஆதிலக்ஷ்மி அவளே
ஆபரணம் அணிந்த ஒளிக்கதிர் ராணி அவளே
எழில் மலரத் தோரணங்கள் சூழ்பவள் அவளே
அழகிய தாமரைமேல் வாழ்பவள் அவளே
மஞ்சள் நிறஉடை தரித்து மலர்மாலை அணிந்தவளே
மங்களம் நிறைந்தவளே வல்லமை மிகுந்தவளே
ஆதிலக்ஷ்மி அன்னை ஆதிலக்ஷ்மி

2. ஸ்ரீ சந்தானலக்ஷ்மி

ஜடாமகுடம் அணிந்து காட்சி தந்தாள்
அன்னை இடுப்பினில் சுகுமாரனை ஏந்தி நின்றாள்
வீரம் மிகுந்த அபயக் கரங்கள் இரண்டிலே
பூரணக் கும்பமும் வைரக் கங்கணமும் விளங்க
அழகிய மாதரும் தீ பமும் தாங்கியே
எழில் வெண் சாமரம் வீசியிருக்க
முத்திழைத்த உரையோடு துலங்கும்
சக்தியோடு எழில் ராணியாக
சந்தானலக்ஷ்மி அவதரித்தாள்
அவள் சந்தான சௌபாக்கியம் தந்திடுவாள்

3. ஸ்ரீ கஜலக்ஷ்மி

பொன்னிறக் குடம் தாங்கி
வெண்ணிறயானை யிரண்டு
தன்னிரு துதிக் கையினால்
அபிஷேக நீர் கொண்டு
அன்னைக்கு நீராட்ட
அலங்கார தேவதையாய்
வெண்பட்டு புடவையுடன் காட்சி தந்தாள்
கரங்கள் நான்கும் உடையவளாம் கஜலக்ஷ்மி
திருக்கரத்தில் ஞானமுத்திரை உடையவளாம் கஜலக்ஷ்மி
இரவும் பகலும் துதிப்பவர்க்கே கஜலக்ஷ்மி
அரச போகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி

4. ஸ்ரீ தனலக்ஷ்மி

செல்வ திருமகளாம் மோகனவல்லி
எல்லோரும் கொண்டாடும் வேதவல்லி
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணிஸ்யாமாளை
வரத முத்திரை காட்டியே பொருள் செல்வம்
வழங்கிடும் அம்பிகை
மாமனோகர தேவி மார்பினில்
ஒற்றைவடப் பொன்னட்டிகை
சிரத்தினில் மணி மகுடமும்
தாங்கிடும் சிந்தாமணி - பல
வரங்கள் வழங்கிடும் ரமாமணி - அவள்
வரதராஜ சிகாமணி அவள்தான் தனலக்ஷ்மி

5. ஸ்ரீ தான்யலக்ஷ்மி

ஆற்றோரம் தன்னில் சுகாசனத்தில் அமர்ந்து
போற்று மன்பரைக் கண்டு மலர்ச்சியும் கொண்டுஎழில்
வாழை மரங்கள் மலர்தேன் பொழிந்து பூஜிக்க
ஆழ்கடல் அன்னையவள் காட்சி தந்தாள்
இடக்கை மேல்புறத்தில் செழுங்கரும்பை யேந்தி
இகத்தினில் நிலவளம் செழிக்க வந்தாள்
அவள்தான் தான்யலக்ஷ்மி! தான்யலக்ஷ்மி

6. ஸ்ரீ விஜயலக்ஷ்மி

சிங்கார முடிதனிலே அலங்காரக் கூந்தல்
செம்மேனியில் சிறந்த பொன்னாபரணங்கள்
அங்குச பாசமும் பல ஆயுதம் கையில் கொண்டு
செங்கோல் செலுத்தும் ராஜவடிவம் கொண்டாள்
அன்னையின் முகம் தன்னில் தவழ்ந்திடும்மந்தஹாசம்
அன்னைப் பறவை தாங்கும் அழகிய மலர்ப்பாதம்
அன்பரைக் காத்து நிற்கும் அவளது தாய்ப்பாசம்
துன்பங்கள் நேராமல் காத்திடும் அவள் நேசம்
விஜயலக்ஷ்மி தேவி விஜயலக்ஷ்மி !

7. ஸ்ரீ மகாலக்ஷ்மி

நிறைந்திடும் அழகோடு வளரும் பொன்மேனியாள்
அறம், பொருள், வீடு, இன்பம் தரும்
நான்கு கரம் கொண்டாள்
அழகிய மலர் கொண்டு யானைகள் வணங்கி நிற்க
எழிலாக காட்சி தந்தாள் எங்கள் தாய்
சௌபாக்கியம் தரும் தெய்வம் தேவி லக்ஷ்மி
அபயக்கரம் நீட்டி அணைக்கும் மகாலக்ஷ்மி !

8. ஸ்ரீ வீரலக்ஷ்மி

ஒன்பது பனைமரங்கள் அடுத்து நிற்க தேவி
சிம்மாசனத்தின்மேல் அமர்ந்திருக்க
வெற்றி எட்டு கைகளிலும் சூலம்
கபாலம் கொண்டாள்
நற்கதியும் நமக்கருள நானிலத்தில் அவதரித்தாள்
பொற்பதம் பணிந்தவர்க்கு பொன்னாவரம் தந்து
வெற்றியுடன் வாழவைப்பாள் வீரலக்ஷ்மி
வரவேண்டும் வரவேண்டும் அஷ்டலக்ஷ்மி
அருளைத் தரவேண்டும் தரவேண்டும் ஆதிலக்ஷ்மி
சந்ததியைத் தந்திடுவாய் சந்தான லக்ஷ்மி
எண்ணும் பல யோகங்கள் தருவாயே கஜலக்ஷ்மி
தனம் பெருக மனமும் மகிழ காண்பாராய் தனலக்ஷ்மி
மனம் குளிர நிலம் செழிக்க நீயருள்வாய் தான்யலக்ஷ்மி
கலைகளில் வெற்றிதனைக் காண அருள் விஜயலக்ஷ்மி
சகல சௌபாக்கியம் தந்திடு மகாலக்ஷ்மி
உலகெங்கும் வீரத்தை நீயருள்வாய் வீரலக்ஷ்மி
உன்நாமம் சொல்பவர்க்கு அருள்புரிவாய் அஷ்டலக்ஷ்மி

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி வருகை பாடல்

எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டுவகை நானறிந்தேன் கோலமயி லானவளே
வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லெட்சுமி
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்
சிந்தைனைக்குச் செவிசாய்த்துச் சீக்கிரமென் னில்லம்வந்து
உந்தனருள் தந்திருந்தால் உலகமெனைப் பாராட்டும்
வந்தமர்ந்து உறவாடி வரங்கள்பல தருவதற்கே
சந்தான லெட்சுமியே தான் வருவாய் இதுசமயம்
யானையிரு புறமும் நிற்கும் ஆரணங்கே உனைத்தொழுதால்
காணுமொருபோ கமெலாம் காசினியில் கிடைக்குமென்பார்
தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்தகஜ லெட்சுமியே
வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்
அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்
உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ
இன்றோடு துயர்விலக இனியதன லெட்சுமியே
மன்றாடிக் கேட்கிறேன் வருவாய் இதுசமயம்
எங்கள்பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும்
தங்கநிறக் கதிராகித் தழைத்துச் சிரிப்பவளே
பங்குபெறும் வாழ்க்கையினைப் பார்தான்ய லெட்சுமியே
மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்
கற்றுநான் புகழடைந்து காசியினில் எந்நாளும்
வெற்றியின்மேல் வெற்றிபெற வேணுமென்று கேட்கிறேன்
பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார்விஜய லெட்சுமியே
வற்றாத அருட்கடலே வருவாய் இதுசமயம்
நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால்
தஞ்சமென உனையடைந்தேன் தாமரைபோல் நிற்பவளே
அஞ்சாது வரம் கொடுக்கும் அழகுமகா லெட்சுமியே
வஞ்சமில்லா தெனக்கருள வருவாய் இதுசமயம்
ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும்
சூழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே
வாழும் வழிகாட்டிடவே வாவீர லெட்சுமியே
மாலையிட்டு போற்றுகிறேன் வருவாய் இதுசமயம்

ஸ்ரீ அஷ்டலட்சுமி 108 போற்றிகள்

ஓம் அகில லட்சுமியை போற்றி
ஓம் அன்ன லட்சுமியை போற்றி
ஓம் அலங்கார லட்சுமியை போற்றி
ஓம் அஷ்ட லட்சுமியை போற்றி
ஓம் அமிர்த லட்சுமியை போற்றி
ஓம் அமர லட்சுமியை போற்றி
ஓம் அம்ச லட்சுமியை போற்றி
ஓம் அபூர்வ லட்சுமியை போற்றி
ஓம் ஆதி லட்சுமியை போற்றி
ஓம் ஆத்ம லட்சுமியை போற்றி
ஓம்  ஆனந்த லட்சுமியை போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியை போற்றி
ஓம் இன்ப லட்சுமியை போற்றி
ஓம் இதய லட்சுமியை போற்றி
ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை போற்றி
ஓம் ஈகை லட்சுமியை போற்றி
ஓம் உண்மை லட்சுமியை போற்றி
ஓம் உதய லட்சுமியை போற்றி
ஓம் உத்தம லட்சுமியை போற்றி
ஓம் உபாசன லட்சுமியை போற்றி
ஓம் ஊர்ஜித லட்சுமியை போற்றி
ஓம் எட்டு லட்சுமியை போற்றி
ஓம் ஏக லட்சுமியை போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை போற்றி
ஓம் ஒற்றுமை லட்சுமியை போற்றி
ஓம் ஒளிப்பிரகாச லட்சுமியை போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியை போற்றி
ஓம் ஒளதார்ய லட்சுமியை போற்றி
ஓம் ஒளஷத  லட்சுமியை போற்றி
ஓம் ஒளபாஷன லட்சுமியை போற்றி
ஓம் கருணை லட்சுமியை போற்றி
ஓம் கனக லட்சுமியை போற்றி
ஓம் கபில லட்சுமியை போற்றி
ஓம் கந்த லட்சுமியை போற்றி
ஓம் கஸ்தூரி லட்சுமியை போற்றி
ஓம் சந்தான லட்சுமியை போற்றி
ஓம் சங்கு லட்சுமியை போற்றி
ஓம் சக்கர லட்சுமியை போற்றி
ஓம் சர்வ லட்சுமியை போற்றி
ஓம் சந்தோஷ லட்சுமியை போற்றி
ஓம் சரச லட்சுமியை போற்றி
ஓம் சகல லட்சுமியை போற்றி
ஓம்  ஞான லட்சுமியை போற்றி
ஓம் தர்ம லட்சுமியை போற்றி
ஓம் தன லட்சுமியை போற்றி
ஓம் தவ லட்சுமியை போற்றி
ஓம் நவ லட்சுமியை போற்றி
ஓம் தான  லட்சுமியை போற்றி
ஓம் வைர லட்சுமியை போற்றி
ஓம் நீல லட்சுமியை போற்றி
ஓம் முத்து  லட்சுமியை போற்றி
ஓம் பவள லட்சுமியை போற்றி
ஓம் மாணிக்க  லட்சுமியை போற்றி
ஓம் மரகத லட்சுமியை போற்றி
ஓம் கோமேதக லட்சுமியை போற்றி
ஓம் பதுமராக லட்சுமியை போற்றி
ஓம் வைடூர்ய லட்சுமியை போற்றி
ஓம் பிரம்ம லட்சுமியை போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியை போற்றி
ஓம் சிவ லட்சுமியை போற்றி
ஓம் ஜோதி லட்சுமியை போற்றி
ஓம் தீப  லட்சுமியை போற்றி
ஓம் தீன லட்சுமியை போற்றி
ஓம் தீர்த்த லட்சுமியை போற்றி
ஓம் திவ்விய லட்சுமியை போற்றி
ஓம் தான்ய லட்சுமியை போற்றி
ஓம் வீர லட்சுமியை போற்றி
ஓம் வித்யா லட்சுமியை போற்றி
ஓம் விஜய லட்சுமியை போற்றி
ஓம் விபுல லட்சுமியை போற்றி
ஓம் விமல லட்சுமியை போற்றி
ஓம் ஜெய லட்சுமியை போற்றி
ஓம் வர லட்சுமியை போற்றி
ஓம் மஹா லட்சுமியை போற்றி
ஓம் வேணு லட்சுமியை போற்றி
ஓம் பாக்கிய லட்சுமியை போற்றி
ஓம்  பால லட்சுமியை போற்றி
ஓம் பக்த லட்சுமியை போற்றி
ஓம் பாமா லட்சுமியை போற்றி
ஓம் புவன லட்சுமியை போற்றி
ஓம் புனித  லட்சுமியை போற்றி
ஓம் புண்ணிய லட்சுமியை போற்றி
ஓம் பூமி லட்சுமியை போற்றி
ஓம் சோபித லட்சுமியை போற்றி
ஓம் ராம லட்சுமியை போற்றி
ஓம் சீதா லட்சுமியை போற்றி
ஓம் சித்த லட்சுமியை போற்றி
ஓம் சிங்கார லட்சுமியை போற்றி
ஓம் ஸ்வர்ண லட்சுமியை போற்றி
ஓம் நாக லட்சுமியை போற்றி
ஓம் யோக லட்சுமியை போற்றி
ஓம் போக லட்சுமியை போற்றி
ஓம் புவன லட்சுமியை போற்றி
ஓம் கோமள லட்சுமியை போற்றி
ஓம் மாதா லட்சுமியை போற்றி
ஓம் பிதா லட்சுமியை போற்றி
ஓம் குரு லட்சுமியை போற்றி
ஓம் தெய்வ லட்சுமியை போற்றி
ஓம் தாமரை லட்சுமியை போற்றி
ஓம் நித்திய லட்சுமியை போற்றி
ஓம் சாந்த லட்சுமியை போற்றி
ஓம் தந்திர லட்சுமியை போற்றி
ஓம் காக்கும் லட்சுமியை போற்றி
ஓம் ராஜ்ய லட்சுமியை போற்றி
ஓம் மோக்ஷ லட்சுமியை போற்றி
ஓம் பராக்கிரம லட்சுமியை போற்றி
ஓம் பிரசன்ன லட்சுமியை போற்றி
ஓம் மங்கள லட்சுமியை போற்றி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...