தேவையானவை
- புழுங்கல் அரிசி -- 1 கப்
- உளுந்தம் பருப்பு -- 1 கப்
- பச்சரிசி -- 1 கப்
- மிளகு -- 2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் வத்தல் -- 8 எண்ணம்
- இஞ்சி -- 1 அங்குலம் அளவு
- கறிவேப்பிலை -- 20 இலை
- உப்பு -- ருசிக்கேற்ப
செய்முறை
- புழுங்கலரிசி,உளுந்தம் பருப்பை தனியாக ஊற வைத்து,இட்லி மாவு பதத்தில் ஆட்டிக் கொள்ளவேண்டும்.
- மிளகு, இஞ்சி, வற்றல் இவற்றை ஒன்றாக ஆட்டிக் கொள்ளவும்.
- பச்சரிசியை இடித்து சலித்துக் கொள்ளவேண்டும்.
- எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைத்து மறுநாள் காலையில் தோசையாக வார்த்து நெய் விட்டு திருப்பி போட்டு கவனமாக எடுத்து பரிமாறவும்.
- அழகர் கோவில் தோசை ரெடி. நன்றி : அறுசுவை.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக