- அரிசி - மூன்று கோப்பை
- பொடி தயாரிக்க:
- காய்ந்த மிளகாய் - பத்து
- தனியா - மூன்று தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - மூன்று தேக்கரண்டி
- வெந்தயம் - முக்கால் தேக்கரண்டி
- மிளகு - அரை தேக்கரண்டி
- எள்ளு - இரண்டு தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கைகள்
- உப்பு - ஒரு தேக்கரண்டி.
- புளிக்காய்ச்சல் தயாரிக்க:
- புளி - ஆரஞ்சு பழமளவு
- எண்ணெய் - அரைக்கோப்பை
- கடுகு - ஒன்றரை தேக்கரண்டி
- மஞ்சத்தூள் - ஒரு தேக்கரண்டி
- கடலைப் பருப்பு - இரண்டு தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - நான்கு
- வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
- பெருங்காயம் - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - நான்கு தேக்கரண்டி
முதலில் அரிசியை வேக வைத்து உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும். புளியை சுடுதண்ணீரில் ஊறவிடவும். | |
பொடிக்கு தேவையானப் பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து, கரகரப்பாக பொடித்து கொள்ளவும். | |
ஊறிய புளியில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி வைக்கவும். | |
சட்டியில் எண்ணெயைக் காய வைத்து கடுகைப் போடவும். அது பொரிந்தவுடன் முதலில் கடலைப்பருப்பை போடவும். | |
பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். | |
அதன் பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும். | |
பின்னர் அதில் கலக்கி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும். | |
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்த பிறகு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலக்கி, அடுப்பிலிருந்து இறக்கி விடவும். | |
பிறகு ஆறவைத்துள்ள சோற்றுடன் புளிக்காய்ச்சலை சிறிது சிறிதாக சேர்த்து, தேவையானால் இரண்டு தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து நன்கு கிளறவும். | |
இப்போது சுவையான புளியோதரை தயார். அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல் புளியை கூட்டிக் குறைத்து கொள்ளலாம். |
2 கருத்துகள்:
This site is very nice than the previous one!! Tips for preparing prasadhams was nice!!!
ரொம்ப நன்றி திரு.ராஜரத்தினம். தங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்
கருத்துரையிடுக