நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...
- சந்தனாதித் தைலம் - சுகம்தரும்.
- திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.
- பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்.
- பால் - நீண்ட ஆயுள் கிட்டும்.
- தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கம்.
- நெய் - வீடு பேறு அடையலாம்.
- தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும்.
- கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம்.
- இளநீர் - போகம் அளிக்கும்.
- எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும்.
- விபூதி - போகமும், மோட்சமும் நல்கும்.
- சந்தனக் குழம்பு, பன்னீர் - திருமகள் வருவாள்.
- வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.
- நெல், எண்ணை - விஷசுரம் நிவர்த்தி.
- நீர் - சாந்தி உண்டாகும்.
- வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும்.
- வெல்லம் - துக்க நிவர்த்தி.
- சர்க்கரை - சத்ரு நாசம்.
- அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
- மாம்பழம் - வெற்றி கிடைக்கும்.
- சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும்.
- கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.
- பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும்.
- சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்தால் நினைக்கின்ற காரியம் நிறைவேறும்
- இளநீரால் அபிஷேகம் செய்தால் குடும்பம் நலம் பெறும்.
- பசும் பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும் .
- பசும் தயிரினால் அபிஷேகம் செய்தால் புத்திர விருத்தி ஏற்படும்.
- நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும் .
- சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் எட்டுவித செல்வம் கிடைக்கும்.
- நெல்லி முல்லைப் பொடி செய்து அபிஷேகம் செய்தால் நோய்கள் நீங்கும் .
- பஞ்சு கவ்வியத்தால் அபிஷேகம் செய்தால் பாபங்கள் நீங்கும் (பஞ்ச கவ்வியம் என்பது பசுவின் பால், தயிர், நெய் ,கோமியம் ,சாணம் இவை ஐந்தும் சேர்ந்தது )
- பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் பெறும் .
- தேன் அபிஷேகம் செய்தால் வாழ்வு இன்பமயமாகும் .
- வாழை பழத்தால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிக்கும் .
- அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும் .
- இவை தவிர மாப்பொடி கடன் தீரவும் ,மஞ்சள் பொடி வசீகரம் ஆகிய பலன்களையும் தரும் .
- மற்றும் கரும்பின் சாறு பிணி நீக்கவும் ,எலுமிச்சம் சாறு பயம் நீக்கவும் செய்கிறது .
- சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்தால் நினைக்கின்ற காரியம் நிறைவேறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக