உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

நம் கோவிலில் இன்று

வணக்கம் அன்பு நெஞ்சங்களே, வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று  நம் கோவிலில் எல்லா சுவாமிகளுக்கும் திருநீராட்டு வைபவம் நடைபெற்றது.
நம் கோவிலின் நிறைய  பங்காளிகள் தங்கள் குடும்பத்தினருடன் காலை 10.00 மணிக்கே வந்திருந்து சுவாமிகளுக்கும், கோவிலுக்கும் தங்களால் இயன்ற கைங்கர்யங்களை செய்து நம் சுவாமிகளின் அருளாசியை பெற்று மகிழ்ந்தனர். உள்ளூரில் இருந்து மட்டுமின்றி வெளியூரில் இருந்து வந்தும் சேவை செய்து மகிழ்ந்தனர். எல்லா சுவாமிகளுக்கும் திருநீராட்டி, எல்லா சன்னிதானங்களையும் சுத்தம் செய்து, முன் மண்டபத்தையும் சுத்தம் செய்தனர். பின் நம் சுவாமிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து மாலை 6.00 க்கு பூஜை நடைபெற்றது. மதியம் அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து பிரசாதங்கள் கொண்டு வந்து உண்டு மகிழ்ந்தனர். நம் அனைத்து  பங்காளிகளும் தவறாது நம் கோவிலின் சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டு நம் சுந்தரராஜ பெருமாள், மாதா, கோவிந்த விநாயகர், கருப்பசாமி, சப்பாணி சுவாமிகளின் அருளாசியை பெற வேண்டுகிறோம்.

நாம் எத்தனை சாமியை வணங்கி வந்தாலும் நம் குலத்தை, நம் சந்ததியை காப்பது நம் குலதெய்வமே.

இன்று நம் கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

  
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...