உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 19 ஜூலை, 2012

மின்சாரத்தை சேமிக்க...


வணக்கம் அன்பர்களே. இன்றைய சூழ்நிலையில் மின்சாரத்தை சேமிப்பது என்பது நமக்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான் செயல் ஆகும்.


மின்விளக்குகள்

  நீங்கள் உபயோகிக்கும் மஞ்சள் ஒளி மின் குமிழ்களைத் (குண்டு பல்ப்) தவிர்த்து வெள்ளொளி மின் குமிழ்களை (C.F.L) உபயோகிக்கவும். வெளிச்சம் தேவையான நேரங்களில் மட்டுமே மின் விளக்குகளை உபயோகியுங்கள். நீங்கள் செலுத்தும் மின் கட்டணமானது, மின் விளக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் சக்தி, அவை உபயோகிக்கப்படும் நேரம் ஆகியவற்றில் மட்டுமே உள்ளது என்பதை நினைவில் வைத்திருங்கள்!

குளிர்சாதனப் பெட்டிகள்

குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறக்கும் முன் ஒரு கணம் சிந்தியுங்கள். வெளியில் எடுக்க வேண்டிய பொருட்கள் எவை? உள்ளே வைக்க வேண்டிய பொருட்கள் எவை? எனத் தீர்மானித்த பின்னரே கதவைத் திறக்க வேண்டும். அடிக்கடி கதவைத் திறப்பதையும் தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் ஏதாவது பழுதுகள் இருந்தால் உடனேயே பழுது பார்த்து விட வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியைப் பொருட்களால் நிறைக்கக் கூடாது. சூரிய ஒளி நேரடியாகப்படும் இடங்களிலோ, வெப்பம் அதிகமான இடங்களிலோ குளிர்சாதனப் பெட்டியை வைக்கக் கூடாது. அதேபோல் சூடான பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியினுள் வைக்கக்கூடாது.


மின்னழுத்திகள்


தேய்ப்பதற்குக் குறைந்த அளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளிலிருந்தே தேய்க்க ஆரம்பிக்க வேண்டும். அதே போல மின்னழுத்தியின் மின்னிணைப்பைத் துண்டித்த பின்னரும் அதன் வெப்பம் குறையும் வரை குறைந்தளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளை தேய்க்க வேண்டும்.
அடிக்கடி மின்னழுத்தியை உபயோகிக்காமல், ஒரே தடவையிலேயே பல ஆடைகளை தேய்க்க பழக வேண்டும். மின்னழுத்தியை ஒருபோதும் நிலைக்குத்தாக வைக்கக் கூடாது. நீராவி அழுத்திகள் சிக்கனமானவையாகும்.  வெப்பத்தைத் தெறிப்படையச் செய்யக்கூடியதாக அழுத்தும் மேசைகளின் மேற்பரப்பு அமைய வேண்டும். ஆடைகளை  அவசியம் தேய்க்க வேண்டுமா எனச் சிந்தித்து தேவையாயின் மட்டுமே தேய்க்க வேண்டும்.

தொலைக்காட்சிகளும் கணினிகளும்

பலர் தொலைக்காட்சி பார்த்து முடிந்தபின் தொலை இயக்கியால் (ரிமோட் கன்ட்ரோல்) அதன் இயக்கத்தை நிறுத்திவிடுவர். அவ்வாறு தொலைக்காட்சியின் இயக்கம் நிறுத்தப்படும் போது  7.3 watts மின்சாரம் உபயோகப் படுத்தப் பட்டு கொண்டேதான் இருக்கும். அதாவது மாதம் 5.3 யூனிட்கள் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆகையால் தொலைக்காட்சி உபயோகிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அதன் மின்னிணைப்பைத் துண்டிப்பதன் மூலம் மின் சக்தியைச் சேமிக்கலாம். அதேபோன்ற செயற்பாட்டை (Standby)  கணினியில் மேற்கொண்டால்  60 watts மின்சாரம் உபயோகப் படுத்தப் பட்டு கொண்டேதான் இருக்கும். இதனால் மாதமொன்றிற்கு 43 யூனிட்கள் மின்சாரம் தேவைப்படுகிறது. கணினி பயன்படுத்துபவர்கள் இதை உணர்வதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

மின் விசிறிகள்

சாதாரண மின் விசிறிகளைவிட மேசை மின் விசிறிகள் (டேபிள் ஃபேன்) சிக்கனமானவை. பழைய மின் விசிறிகள் எவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் ஒரே அளவிலான மின்சாரத்தையே செலவழிக்கும். ஆனால், தற்போது  அவ்வாறானவையல்ல.  மின் விசிறிகளிற்காகச் செலவாகும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழி, காற்றோட்டமான வீடுகளை அமைத்தலாகும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...