வணக்கம் அன்பர்களே, இன்று நம் ஊரில் பிறந்து இன்றுவரை இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்து வரும் ஐயா காமராஜரின் 110 ஆவது பிறந்தநாள். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் , சிலருடைய பிறப்பு
மற்றவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும்
சொந்தக்காரர் காமராஜர் எனும் பெருந்தலைவர் . இன்னொருவர் சொல்லிக் கொடுத்து
வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை காமராஜரை
பார்க்கும் போது உணர முடியும் .
ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ - முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன்.
காமராஜர் பற்றி படிக்க படிக்க சுவையாக இருக்கும் .அவரை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன் .
சினிமா என்றால் காமராஜருக்கு பிடிக்காதாம் .அதனால் தான் நிஜமாகவே நாம் சினிமாவில் பார்த்து மட்டுமே வியக்கும் போலி நாயகர்கள் போல அல்லாது நிஜத்தில் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் .
மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்ககூடாது, பதவி விலகி கட்சி
நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறியதோடு நிற்காமல் தானும் பதவி விலகி
முன் உதாரணமாக இருந்தார் .
இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பிருந்தும் இந்திரா காந்தி ,சாஸ்திரியையே பிரதமராக்கினார் . நேரு இறந்த பின்னர் இந்திராகாந்தியை பிரதமராக்கும் வேலையை மிக திறமையாக செய்து முடித்தார் .
கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை அனைத்து இளைய தலைமுறைகளுக்கும் பாடமாக்கப் பட்டு அவரைப் போல அனைவரும் வாழ்ந்து நம் நாட்டையும் உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும்.
ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ - முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன்.
காமராஜர் பற்றி படிக்க படிக்க சுவையாக இருக்கும் .அவரை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன் .
சினிமா என்றால் காமராஜருக்கு பிடிக்காதாம் .அதனால் தான் நிஜமாகவே நாம் சினிமாவில் பார்த்து மட்டுமே வியக்கும் போலி நாயகர்கள் போல அல்லாது நிஜத்தில் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் .
- படிப்பு ஏறாததன் காரணமாக 6 ஆம் வகுப்பிலேயே தனது படிப்பை நிறுத்தி விட்டார் .
- ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார் .
- பலரிடம் ஆலோசனை கேட்கும் நேரு ,இறுதியில் காமராஜர் சொல்வதையே கேட்பார் .
- காமராஜர் பட்டப்படிப்பு படிக்காதவராக இருக்கலாம் .ஆனால் அவரை சுற்றி எப்போதும் படித்த மேதைகள் மொய்த்திருப்பார்கள் .
ஆனந்த விகடன் குறிப்புகள்
=========================================================================
சட்டசபையில் கலைஞர் :- ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்று ஏதோ வசனங்கள் சொல்லிகொண்டிருந்தார் .
காமராஜர் கேட்டார்.. “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது?”
“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்!” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார்.
==============================================================================================
பொருளாதாரத்தில்
ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி
களை அழகாக நாவலர் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தார்.
காமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் .
அவரது காலகட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றது .- தான் முதல் அமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்பு சலுகைகள் தராதவர் .
- ஏழை குழந்தைகளும் கல்வி கற்க வரவேண்டுமென்று மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் .
- எழுத்தறிவு இன்மையை போக்க 11 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தினார் .
- எல்லா பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார் .
இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பிருந்தும் இந்திரா காந்தி ,சாஸ்திரியையே பிரதமராக்கினார் . நேரு இறந்த பின்னர் இந்திராகாந்தியை பிரதமராக்கும் வேலையை மிக திறமையாக செய்து முடித்தார் .
அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!!!!
கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை அனைத்து இளைய தலைமுறைகளுக்கும் பாடமாக்கப் பட்டு அவரைப் போல அனைவரும் வாழ்ந்து நம் நாட்டையும் உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக