உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 26 மார்ச், 2012

கோவிலின் பொதுக்குழு கூட்டம் ' 2012

வணக்கம் அன்பர்களே, நேற்று 25.5.2012 ஞாயிற்று கிழமை காலை 10:30 மணிக்கு நம் பூர்வீக கோவிலில் நடைபெற்றது.



25.5.2012 ஞாயிற்று கிழமை காலை 10:30 மணிக்கு நம் பூர்வீக கோவிலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நம் பங்காளிகள் பலர் கலந்து கொண்டனர்.  திரு. B.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்  திரு. P.C.சுந்தரராஜன், திரு.S.திருமால், திரு.S.தனசேகரன், திரு.A.ஜெயயோகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1) இந்த ஆண்டு  தலைக்கட்டு வரி ரூபாய் 251  என தீர்மானிக்கப்பட்டது.

2) வழக்கம் போல் இந்த ஆண்டும் அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாத சுவாமியை எதிர்கொண்டு அழைத்து நம் கோவிலில் அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் அதற்கு  நம் விருதுநகர் இந்துநாடார் தேவஸ்தானத்தில் அனுமதி பெற கடிதம் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

3) இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும் நந்தன வருடம் சித்திரை 23 ஆம் தேதி 5.5.2012 சனிக்கிழமை நம் பூர்வீக கோவிலில் பால்பழம் வைத்து வணங்கி திரி எடுத்து அருப்புகோட்டை ரோட்டில் உள்ள நம் பெரிய கோவிலுக்கு சென்று  அனைத்து சுவாமிகளையும் வழிபாடு செய்யவும், நந்தன வருடம் சித்திரை 24 ஆம் தேதி 6.5.2012 ஞாயிற்றுக்கிழமை காலை திரி எடுத்து அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாத சுவாமியை எதிர்கொண்டு அழைத்து சிறப்பு பூஜைகள் செய்யவும், பின் உச்சி கால பூஜை, மாலை அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யவும், நந்தன வருடம் சித்திரை 25 ஆம் தேதி 7.5.2012 திங்கள்கிழமை இரவு கருப்பசாமி, சப்பாணி சாமி வழிபாடு செய்வது  என தீர்மானிக்கப் பட்டது.

 நன்றி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...