வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழா'2016 வரும் ஏப்ரல் மாதம் 21,22,23 அன்று சிறப்பாக கொண்டாடப் படவுள்ளது. அதுசமயம் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் அவசியம் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் கோவில் டிரஸ்டிகள் சார்பாக அழைக்கிறோம்.
வரும் 21.4.16 வியாழன் கிழமை காலை நம் சுவாமிகளுக்கு அபிஷேகம் அதை
தொடர்ந்து அலங்காரம் செய்து வழிபாடு. மாலை நம் பூர்வீக கோவிலில் பூஜை
செய்து திரி எடுத்து பெரிய கோவிலுக்கு சென்று பின் பூஜை நடைபெறும்.
நன்றி.
வரும் 22.4.16 வெள்ளி கிழமை கள்ளழகர் எதிர்சேவை மற்றும் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளல். நம் கோவிலில் அன்று காலை திரி எடுத்து குதிரை வாகனத்தில் எழுந்தருளும் ஶ்ரீ ரெங்கநாத சுவாமியை எதிர்சேவை செய்து நம் கோவிலுக்கு அழைத்து வந்து பூஜை செய்து வழிபாடு செய்தல், அதன்பின் மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை. நம் இளைஞர் குழு நடத்தும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மாலை திரி எடுத்து நம் கோவிலை வலம் வந்து அனைவருக்கும் பூசாரி திரி காப்பு வழங்கி வழிபாடு நடைபெறும்.
வரும் 23.4.16 சனிக்கிழமை இரவு நம் காவல் தெய்வங்களான ஶ்ரீ கருப்பசாமிக்கும் ஶ்ரீ சப்பாணி சாமிக்கும் படையலிட்டு வழிபாடு நடைபெறும்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக