உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 13 மார்ச், 2014

சிறப்பாக நடைபெற்ற மாசி கடைசி சனி 8.3.2014

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலில் சிறப்பாக நடைபெற்ற மாசி கடைசி சனி வார வழிபாட்டின் தொடர்ச்சியை இப்போது காண்போம்.


கடந்த 8.3.14 சனிக்கிழமை காலை 8:45 மணிக்கு அழகர் கோவில் பட்டர்களின் சிறப்பு பூஜை நம் பூர்வீக கோவிலில் நடைபெற்றது. பட்டர்கள் மந்திரங்கள் முழங்க நமக்கெல்லாம் அழகர்கோவிலின் மூலஸ்தானத்திற்குள் இருந்த உணர்வு. நம் பெருமாளும், தாயார்களும் சிரித்த முகத்துடன் நமக்கு அருளாசிகளை வழங்கினர். அந்த காணக்கிடைக்காத அரிய காணொளி இதோ உங்களுக்காக.


 

நம் பூர்வீக கோவிலில் பூஜை முடிந்த பின் நம் பெரிய கோவிலில் கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம் மற்றும் நவக்ரஹ சாந்தி ஆகிய ஹோமங்கள் பட்டர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. ஹோமத்தில் நம் பங்காளிகள் பதினெட்டு தம்பதியர்கள் மாலை சகிதமாக கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு.






















நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...