கடந்த 8.3.14 சனிக்கிழமை காலை 8:45 மணிக்கு அழகர் கோவில் பட்டர்களின் சிறப்பு பூஜை நம் பூர்வீக கோவிலில் நடைபெற்றது. பட்டர்கள் மந்திரங்கள் முழங்க நமக்கெல்லாம் அழகர்கோவிலின் மூலஸ்தானத்திற்குள் இருந்த உணர்வு. நம் பெருமாளும், தாயார்களும் சிரித்த முகத்துடன் நமக்கு அருளாசிகளை வழங்கினர். அந்த காணக்கிடைக்காத அரிய காணொளி இதோ உங்களுக்காக.
நம் பூர்வீக கோவிலில் பூஜை முடிந்த பின் நம் பெரிய கோவிலில் கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம் மற்றும் நவக்ரஹ சாந்தி ஆகிய ஹோமங்கள் பட்டர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. ஹோமத்தில் நம் பங்காளிகள் பதினெட்டு தம்பதியர்கள் மாலை சகிதமாக கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக