வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும். வந்தால் போகாதது இரண்டு-
புகழும், பழியும். போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும். தானாக வருவது
இரண்டு- இளமையும், முதுமையும். உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும்.
அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும். தவிர்க்க முடியாதது இரண்டு-
பசியும், தாகமும். பிரிக்க முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும். இழிவைத்
தருவது இரண்டு- பொறாமையும், கோபமும். அனைவருக்கும் சமமாவது இரண்டு-
பிறப்பும், இறப்பும். இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக