உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

இன்று வரலட்சுமி நோன்பு

வணக்கம் அன்பர்களே, இன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு லட்சுமி தாயாரை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம் பெற்றுள்ளது. வரங்களை வாரி வழங்கும் வரலட்சுமிதாயே! பூரண கலசத்தில் வீற்றிருப்பவளே! ஸ்ரீபீடத்தில் ஆட்சிபுரிபவளே! செந்தாமரை மலரை விரும்பி ஏற்பவளே! எங்கள் நாட்டிற்கும் , வீ்ட்டிற்கும் வளம் பல அருளும்படி போற்றி வணங்குகிறேன்.



முவுலகையும் காப்பவளே! நல்லோர் நெஞ்சில் வாழ்பவளே! ஸ்ரீதரனின் துணைவியே! துன்பம் தீர்ப்பவளே! மந்திர வடவானவளே! என்னென்றும் என் இல்லத்தில் உன்னருள் நிலைத்திருக்க வேண்டும்.


மாயோன் மனம் கவர்ந்தவளே! ராஜயோகம் அளி்ப்பவளே! ஜகன் மாதாவே!சந்திரனைப் போல குளிர்ந்த பார்வை கொண்டவளே! அபயக்கரம் நீட்டி என்னை ஆதரிப்பாய் அன்னையே!

அமுதம் நிறைந்த பொற்கலசம்தாங்கியவளே! பூங்கொடி போன்றவளே! அலைகடலில் உதித்தவளே! அஷ்ட ஐஸ்வர்யம் தருபவளே! உன்னருளால் செல்வ வளம் பெருகட்டும்.

பிருகு முனிவரின் மகளாக வந்தவளே! பார்கவியே! குலமாதர் போற்றும் குணக்கடலே! மகாலட்சுமித்தாயே! உன் கடைக்கண் அருளால் உலகம் செழித்தோங்கட்டும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...