உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 18 ஜூலை, 2013

இந்துக்களின் தினசரிக் கடமைகள்

வணக்கம் அன்பர்களே, இந்துக்களின் தினசரிக் கடமைகள் பற்றி இங்கே காணலாம்.
1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழ வேண்டும்.

2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்தனை செய்ய வேண்டும்.

3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திருநாமம் - ஏதேனும்) அணிய வேண்டும். நீறில்லா நெற்றி பாழ் என்பதற்கேற்ப எதையும் அணிந்து கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது.

4. இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவேண்டும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.

5. சமய நூல்களைப் படித்தல் வேண்டும்.

6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...