உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 25 ஜூன், 2013

பொன்மொழிகள்

வணக்கம் அன்பர்களே, இன்றைய பதிவில் இணையத்தில் நான் படித்து ரசித்த பொன்மொழிகள் சிலவற்றை உங்களுக்காக பதிவிடுகிறேன்.
தனது தேசம் இழந்து போனதற்காகக் கவலைப்படும் மன்னனின் நிலைக்கும், தனது பொம்மை உடைந்ததற்காக வருத்தப்படும் குழந்தையின் நிலைக்கும் வேறுபாடு அதிகம் இல்லை.
******
ஒருவன் கடும் முயற்சியினால் உயர்ந்த மலையின் சிகரத்தை அடைந்து விடலாம்.ஆனால் அவன் அங்கேயே வாழ்ந்து விட முடியாது.
******
வெற்றிகரமாகப் பொய் சொல்ல வரம்பற்ற நினைவாற்றல் வேண்டும்.
******
கோபமான மனிதன் தனது வாயைத் திறந்து கண்களை மூடிக் கொள்கிறான்.
******
இளமை குறைகள் உடையது.
நடுத்தர வயது சிரமங்கள் உடையது.
முதுமை வருத்தங்கள் உடையது.
******
'தான் மிக முக்கியமானவன்'என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி,''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்துவிடும்?''
******
வாழ்க்கை முழுவதும் இன்பமா!
அதைக் காட்டிலும் நரகம் எதுவும் இருக்க முடியாது.
******
நெற்றியைக் காயப்படுத்திக் கொள்வதைவிட
முதுகை வளைத்துச் செல்வது நல்லது.
******
நரி நம்புகிறது,''எல்லோரும் என்னைப்போல கோழியைப் பிடித்துத் தின்கிறார்கள்,''என்று.
******
நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் என்னைவிட ஏதாவது ஒரு வகையில் சிறந்தவனாக உள்ளான்.
******
பணிதல் நல்ல பண்புதான்.அதில்  ஒரு வரம்பைக் கையாளவில்லை என்றால் நீ அடிமையாவதற்கு அஸ்திவாரம் போடப்படும்.
******
ஒரு வாக்குவாதத்தின் உச்சத்தில் யார் அடிதடியில் இறந்குகிறார்களோ,அவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்று பொருள்.
******
நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வது என்பது ஒரு நல்ல குடையைப் போன்றது.ஆனால் அது நல்லதொரு கூரை இல்லை.
******
பணிவாக நடந்து கொள்வது,
மேலோரிடம் எனில்,அது கடமை.
சமமானவரிடம் என்றால் அது பண்பாடு.
கீழானவரிடம் என்றால் அது பெருந்தன்மை.
******
தொழிலில் மகிழ்ச்சி இருந்தால்
வேலையில் கச்சிதம்(perfection) தானே வரும்.
******
பிரச்சினைகள் என்பவை சிறு கற்கள் போன்றவை.
கண்ணின் அருகில் வைத்தால் நம்முடைய பார்வையை மறைத்துவிடும்.
தள்ளி வைத்துப் பார்த்தால் அவை எவ்வளவு சிறியவை என்பது புரியும்.
******
வெற்றி என்பது நிரந்தரம் அல்ல.தோல்வி என்பது இறுதியானது அல்ல.எனவே வெற்றி பெற்ற பின்னும் நம் பணியை நிறுத்தி விடக் கூடாது.தோல்வி அடைந்தாலும் முயற்சியைக் கைவிடக் கூடாது.
******
நம்மிடையே ஒரு தவறான கண்ணோட்டம்;
நாம் எப்போதுமே இன்றைக்கு விட நாளைக்கு நமக்கு அதிகமான நேரம் இருக்கிறது என்று நினைக்கிறோம்,நம்புகிறோம்.
******
கண்கள் இரண்டும் சேர்ந்தே இமைக்கின்றன;சேர்ந்தே பார்க்கின்றன.சேர்ந்தே அழுகின்றன.சேர்ந்தே தூங்குகின்றன.ஆனாலும் அவை ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வதில்லை.அதுதான் உண்மையான நட்பின் இலக்கணம்.
******
உலகின் மிகச்சிறிய சர்வாதிகாரமான வார்த்தை எது தெரியுமா?
'அதெல்லாம் எனக்குத் தெரியாது.'
******
மூன்றுவித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
*தன்னைப் பற்றிய பொறுப்பைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் யார் கையிலாவது தன்னை ஒப்படைக்கக் காத்திருப்பவர்கள்.இவர்கள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
*மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றி,தன்னை மட்டும் பார்த்துக் கொள்பவர்கள்.இவர்கள் மிருகத்தைப் போன்றவர்கள்.
*தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால் தாமாகவே அவர்களை அண்டி உதவி செய்பவர்கள்.இவர்கள்தான் மனிதர்கள்.
****** 
நன்றி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...