உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். சர்க்கரைப் பொங்கல் போல் உங்களின் வாழ்க்கையும்  இனி இனிக்க நம் பெருமாள் அருள்புரிவார்.



பழையன கலைந்து
புதியன அணிய
வந்திடும் திருநாளாம்
தைப்பொங்கல்.

வேர்வையினை உழைப்பாக்கி
நம் உண்ண உணவளிக்கும்
உழவனுக்கு விழா எடுக்கும்
பெருநாளாம் இன்று..

பூமியின் அசைவுக்கு மட்டுமன்றி
மனித மனங்களின்
இருளை போக்க
உதித்திடும் சூரிய தேவனுக்கு
நமஸ்காரம் செலுத்திடும்
திருநாள் இன்று

பானைகளில் பொங்கிடும்
நுரை போல
மனித மனங்களில் என்றும்
இன்பம் பொங்கி வழிந்திட
தமிழர் தாயகமெங்கும்
செழுமை பொங்கிட
வாழ்த்துகின்றேன் நானும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...