உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

இருமல் குறைய

வணக்கம் அன்பர்களே, இந்த மழை மற்றும் குளிர் காலங்களில் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய  பிரச்சனை காய்ச்சல், சளியினால் ஏற்படும் இருமல். அதை போக்க மிக எளிய பாட்டி வைத்தியம் இது.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

நாம் யார் யார் பின்னால் செல்ல வேண்டும்

வணக்கம் அன்பர்களே,
அரசியல்கட்சி தலைவர்கள் நன்மை செய்வார்கள் என நம்பி, அவர்கள் பின்னால் செல்லும் அப்பாவி ஏமாளி ஜனங்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், யார் பின்னால் போக வேண்டும், யாருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று சாஸ்திரம் சில விதிகளைச் சொல்லியிருக்கிறது.
*  பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து வகை யாகங்களை தவறாமல் செய்யும் ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்ல வேண்டும்.
*  கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போ.
*  பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் போ.
*  யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நட.
*  தலையில் கனமான பொருளை எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால் வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல். இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு உடல் சுத்தம், பேச்சில் சுத்தம், மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...