உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஆடி 18 அழைப்பிதழ்

நம் கோவிலின் ஆடி 18ம் பெருக்கு திருவிழாவில் கலந்து கொள்ள நம் அனைத்து பங்காளிகளையும் அழைக்கிறோம்




வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் ஆடி 18ம் பெருக்கு வழக்கம் போல் வரும் ஆகஸ்ட் 3 புதன்கிழமை காலையில் நம் அருப்புக்கோட்டை ரோட்டில் அமைந்திருக்கும் நம் பெரிய கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்து விட்டு பின் நம் பங்காளிகள் அனைவரும் வேன்களில் அழகர்கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அழகரை வழிபாடு செய்ய இருப்பதால் அனைத்து பங்காளிகளும் தவறாமல் கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளாசியை பெற வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம். வேன்களில் அழகர்கோவில் வர விரும்புபவர்கள் திரு.A.ஜெயயோகன் அவர்களிடம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் எத்தனை பேர் வருகிறார்களோ அதை வைத்துத்தான் எத்தனை வேன் என்று புக் செய்ய முடியும். ஒரு நபருக்கு கட்டணம் ரூ.100. மேலும் இந்த முறை அழகர்கோவிலுக்கு செல்வதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நம் அழகர்கோவிலில் கடந்த 10.7.2011 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. கும்பாஷேகம் நடந்த ஒரு மண்டலத்திற்க்குள் சுவாமியை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானது. எனவே அனைவரும் தவறாது வந்து கலந்து கொள்ளுங்கள். நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...